
aakash-chopra-picks-indias-17-member-squad-for-tour-of-sri-lanka (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
விராட் கோலி, ரோகித், பும்ரா, கே.எல்.ராகுல், ஜடேஜா என அணியின் மிக முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால் தவான், பிருத்வி ஷா, சூரியகுமார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக், குர்ணால், புவனேஷ்வர் குமார், சைனி, தீபக் சாஹர், சஹால், ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் மாதிரியான வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என தெரிகிறது.
பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னதாக சொன்னதை போலவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் புதிய இந்திய அணியை அனுப்புவது குறிப்பிடத்தக்கது.