
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது ஆர்சிபி தான். ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ஆர்சிபி ரசிகர்கள் தங்களுடைய அணி வீரர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள்.
இந்த நிலையில் ஆர் சி பி அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் விளையாடிய டிவிலியர்ஸ் 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் 37 அரை சதங்களும் அடங்கும். ஆர்சிபி-யின் லெஜெண்டாக டிவில்லியர்ஸ் இருக்கிறார். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதனால் டிவிலியர்ஸ் ஆர்சிபி அணியின் மென்டராக வரப் போகிறார் என செய்திகள் உலா வந்தது.
எனினும் இது குறித்து தற்போது டிவில்லியஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, “தம் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் எந்த அணியிலும் எந்த பொறுப்பிலும் சேர யாரிடமும் பேசவில்லை. ஆனால் எனக்கு விருப்பம் இருக்கிறது. அதற்காக நான் இன்னும் தயாராகவில்லை. என் மனசுக்கு தெரியும் ,நான் எப்போதுமே ஆர்சிபி பையன் தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நான் எந்த அணியிலும் சேர்ந்து கொள்ள விரும்பவில்லை.