
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு ஐபிஎல் தொடரில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிரடி ஆட்டங்களுக்கு பஞ்சமே வைக்காத டி வில்லியர்ஸை இந்திய ரசிகர்கள் மிஸ்டர் 360 டிகிரி என்ற அடைமொழியுடனும் அழைத்து வந்தனர்.
ஆர்சிபி அணிக்கு விராட் கோலி ஒரு தூண் என்றால், மற்றொரு தூணாக டிவில்லியர்ஸ் இருந்தார். ஆனால் கடந்தாண்டு ஐபிஎல் தொடருடன் அவர் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். கடந்த 2018ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தனது அதிரடியால் மீண்டும் தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவர் தனது ஓய்வை அறிவித்து வெளியேறினார். இந்நிலையில் தனது மகிழ்ச்சியை ஐபிஎல் 2021ஆம் ஆண்டு தொடர் தான் கெடுத்துவிட்டதாக டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.