
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணியில் மைக்கேல் பெப்பர் 3 ரன்களிலும், கேப்டன் டேனியல் லாரன்ஸ் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஜென்னிங்ஸும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 5 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல் 3 ரன்களுக்கு என விக்கெட்டை இழக்க, ரவி போபாரா 31 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் டௌசன் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஸ்கோரை சேர்த்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் லண்டன் ஸ்பிரிட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்தது. சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - கிரஹாம் கிளார்க் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் கிரஹாம் கிளார்க் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஓலிவர் ராபின்சன்னும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது.