
இந்திய அணியின் இளம் வீரர் உம்ரான் மாலிக். ஐபிஎல் தொடரில் மிகவும் எளிதாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசியதால், உம்ரான் மாலிக் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட உம்ரான் மாலிக், இளம் வீரருக்கான மிடுக்கோடு பந்துவீசினார். இதனால் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் லைன் மற்றும் லெந்த் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டது.
இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உம்ரான் மாலிக் ரன்களை விட்டுக்கொடுத்தாலும், விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர் என்று அனைவருக்கும் நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் உம்ரான் மாலிக் குறித்து கவாஸ்கர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுனில் கவாஸ்கர் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்தியாவுக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன் தெரிவித்துள்ளார்.