
'After Some Losses I’ve Sat Next To You With Tears In Your Eyes': Anushka Pens Down A Heartfelt Mess (Image Source: Google)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெள்ளிக்கிழமை இழந்த நிலையில், சனிக்கிழமை அவா் இந்தத் திடீா் அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, பல்வேறு தரப்பினர் கோலி குறித்து புகழாரம் சூட்டிவருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும்போது நீங்கள்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று கூறியது. அன்று நீங்கள், நான், தோனி மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். தோனி அன்று நகைச்சுவையாக உன் தாடி இவ்வளவு வேகமாக நரைக்க போகிறதே என்று கூறினார்.