
தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆற்றத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டி காக், வாண்டர் டுசன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சதம் அடித்தனர்.
பின்னர் 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் குவித்ததால் 102 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.