
எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக வலம் வருவார் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்டப்பட்ட ரிஷப் பந்த், தற்பொழுது குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணில் இருந்து புறக்கணிக்கப்பட்ட வருகிறார்.
இதுவரை 62 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடினாலும் டி20 போட்டிக்கு இவருக்கான முன்னுரிமை மறுக்கப்பட்டு வருவது தற்பொழுது வளமையாக நீடித்து வருகிறது. டெஸ்ட் போட்டியை டி20 போட்டி போல் விளையாடும் திறமை படைத்த ரிஷப் பந்தால், டி20 தொடரில் நிலையாக விளையாட முடியாமல் போனது இதற்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.
குறிப்பாக தினேஷ் கார்த்திக்கின் வருகைக்கு பிறகு ரிஷப் பண்டின் இடம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் வருவதால் உலகக் கோப்பை தொடரில் இவர் ஆடும் லெவனின் விளையாட வைக்கப்படுவாரா..? அல்லது மாட்டாரா..? என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது.