
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டு ஆடிவருகிறது இந்தியா.
முதலிரண்டு டி20 போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த், வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல்2 போட்டிகளில் சரியாக ஆடாத ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 57 ரன்கள் அடித்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.