
ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டதால் இந்திய வீரர்கள் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர். டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று போட்டிகள் ஓமனிலும், சூப்பர் 12 போட்டிகள் அமீரகத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 24ஆம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரை ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புடன் கொண்டு செல்ல இந்த திட்டத்தை ஐசிசி போட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்னைகள் காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டும் தான் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதுவதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டி குறித்து கடந்த சில தினங்களாக பேசி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் ஆகியோர் இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடுவோம், இந்த முறை இந்தியாவை வெல்வது சுலபம் தான் எனத்தெரிவித்து வருகின்றனர்.