
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பிரபலங்கள் பலரும் கொரோனா நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நிதியுதவி சேகரிக்கும் முயற்சியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டிருந்தார்.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா இணைந்து கரோனா நிதியுதவி உதவி திரட்ட ‘கெட்டோ' என்ற திட்ட பெயரில் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கினர். அவர்கள், அதில் முதல் ஆளாக ரூ.2 கோடி நிதி உதவியும் செய்து வியக்க வைத்தார்.
இந்நிலையில் மே 7ஆம் தேதி தொடங்கப்பட்ட அந்த வலைதளம் 7 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்த விராட் கோலி, அதற்குள்ளாக ரூ.7 கோடி திரட்ட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்தார். மேலும் அந்த வலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.