
நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டி தொடர்ங்குவதற்கு முன்பாக பெரும்பாலானவர்களின் கருத்துக்கணிப்பில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என்று இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள்? யாருக்கு எந்த இடம்? என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்திய அணி செட்டில் செய்யப்படாத ஒரு அணியாக இருந்தது.
அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் மிகவும் அணி அமைப்பில் தெளிவாக இருந்தார்கள். அவர்களுக்கு தங்களுடைய 11 வீரர்கள் யார் என்று தெரியும். மேலும் மிகக் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு படை அசாதாரண வலிமையோடு இருந்தது. முதல் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வேதப்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை இழந்திருந்தார்கள்.
இப்படியான சூழ்நிலையில்தான் இந்திய அணி பாகிஸ்தான அணியை வென்றதோடு, மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றது பெரிய ஆச்சரியத்தையும் அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் கொடுத்து இருக்கிறது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியை நோக்கி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.