
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் நகரில் வெஸ்ட் இண்டீஸ் – இந்திய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இத்தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி இந்தியா 1 – 0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் வீரர்களின் லக்கேஜ் வருவதற்கு தாமதமானதால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய இப்போட்டி இரவு 11 மணிக்கு தொடங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெஸ்ட் இண்டீசின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசு 19.2 ஓவரில் 141/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதும் மிடில் ஆர்டரில் எந்த பேட்ஸ்மேன்களும் 50 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இருப்பினும் 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெற்றி பெற விடாமல் சிறப்பாக பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடினார்கள்.