Advertisement

ஒரு அணியாக நாங்கள் சரிவை சந்தித்துள்ளோம் - ரிஷப் பந்த்!

எனது மோசமான ஃபார்ம் குறித்து அதிகம் சிந்திக்காமல் அதை எளிமையாக வைத்துகொள்ள விரும்புகிறேன் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
ஒரு அணியாக நாங்கள் சரிவை சந்தித்துள்ளோம் - ரிஷப் பந்த்!
ஒரு அணியாக நாங்கள் சரிவை சந்தித்துள்ளோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 27, 2025 • 08:28 PM

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 27, 2025 • 08:28 PM

மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

Also Read

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த், “இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஒரு அணியாக நாங்கள் எடுத்த சரியான முடிவு என்று நாங்கள் உணர்கிறோம், ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் எங்கள் பேட்டிங்கை ஆதரிக்கிறோம். அதனால் இந்த முறை பந்து வீச்சாளர்களே, அவர்களுக்கு சிறந்த சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் இன்று எங்களுடைய நாளாக அமையவில்லை. 

ஒரு அணியாக நாங்கள் சரிவை சந்தித்துள்ளோம். ஆனால் சரியான நேரத்தில் எங்களுக்கு ஒரு இடைவெளி இருப்பதால் எங்களின் தவறை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறேன். மேலும் எனது மோசமான ஃபார்ம் குறித்து அதிகம் சிந்திக்காமல் அதை எளிமையாக வைத்துகொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இது போன்ற ஒரு சீசனில், விஷயங்கள் உங்கள் வழியில் நடக்காத இடத்தில், நீங்கள் ஒரு வீரராக உங்களை நீங்களே கேள்வி கேட்கத் தொடங்குவீர்கள் - அதனைச் செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள்.

அணி நன்றாக இருக்கும்போது, ​​நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது ஒரு குழு விளையாட்டு. ஒவ்வொரு முறையும் நீங்கள் தனிநபரை வெளியேற்றினால், அது சரியான செயல் அல்ல என்று நான் நினைக்கிறேன். மயங்க் யாதவ் காயத்திலிருந்து மீண்டு வருவதைப் பார்ப்பது நிச்சயமாக நன்றாக இருந்தது. மேலும் முதல் போட்டியிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அடுத்தடுத்த போட்டிகாளில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 35 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement