
ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்ற சொல்லை இங்கிலாந்து வீரர்களும், ஊடகங்கள் தங்களின் கைகளில் எடுத்துள்ளன. ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி பேஸ் பால் திட்டம் மூலமாக வெற்றி கிடைக்கும் என்று அபார நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி பேஸ் பால் திட்டத்தை தங்களது வழக்கமான கிரிக்கெட் மூலமாகவே எளிதாக வீழ்த்தியது.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் கூட ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றியை பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இன்னும் ஒரேயொரு போட்டியில் வென்றால், ஆஸ்திரேலிய அணி 22 ஆண்டுகளுக்கு பின் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து மண்ணில் வென்று சாதனை படைக்கும்.
இதனிடையே 2ஆவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒட்டுமொத்த இங்கிலாந்து அணி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் என அனைவரும் ஸ்பிரிட் ஆப் தி கேம் என்று பேச தொடங்கியுள்ளார்.