
உலகப் புகழ் பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த முறை இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இருக்க, தற்பொழுது இரண்டாவது நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை ஐந்தாவது நாளில் எட்டி இருக்கிறது.
ஆட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று இங்கிலாந்து கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்க 257 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகிறது. இங்கிலாந்தில் கடைசியாக நடந்த ஆஷஸ் தொடரில் இப்படியான ஒரு ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் நின்று வென்று கொடுத்திருந்தார். இப்பொழுது அவர் களத்தில் இருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இங்கிலாந்து ரசிகர்களுக்கு இருக்கிறது.
ஆனால் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்துக்கு மிட்சல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை தூக்கி அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஒரே ஓவரில் ஜோரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கமே கொண்டு வந்து விட்டார்.