
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நான்கு நாட்கள் நடந்து முடிந்திருக்கும் இந்த போட்டியில் தற்பொழுது இங்கிலாந்து கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கிறது வெல்வதற்கு 257 ரன்கள் வேண்டும் என்கின்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இங்கிலாந்தில் வைத்து நடந்த கடைசி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் கடைசி விக்கட்டை கையில் வைத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் அற்புதமான விளையாடி வெற்றி பெற்று கொடுத்திருப்பார். தற்போதைய போட்டியிலும் அவர் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சிறப்போடு ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர் நாதன் லையன் களமிறங்கினார். அவர் பந்துவீச்சின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஸாக் கிரௌலி விக்கட்டையும் வீழ்த்தினார். மேலும் தொடர்ந்து அவர் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது அவரது காலில் தசைப்பிடிப்பு மாதிரி ஏற்பட அவர் மைதானத்தை விட்டு நடக்க முடியாமல் மருத்துவர் உதவியுடன் வெளியேறினார்.