
Ashes Not At Risk Despite Covid Cases In England Camp, Clears Cricket Australia's Chief (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட், மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அணியின் இரு பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வருவதற்கு முன்பு அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதியான பிறகு அரை மணி நேரமாக தாமதமாக 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டம் முடிந்த பிறகு அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.