
Ashish Nehra set to become head coach of Ahmedabad IPL team: Report (Image Source: Google)
ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது.
அதில் சஞ்சீவ் கோயங்கா குழுமம் 7,090 கோடிக்கு லக்னோ அணியையும், சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5,625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இருக்கும் 8 ஐபிஎல் அணிகள், பிசிசிஐ விதிமுறைகளுக்கு உட்பட்டு நான்கு வீரர்கள் வரை தக்கவைத்து, அதனை அறிவித்தது. புதிதாக இணைந்துள்ள அகமதாபாத், லக்னோ அணிகள், ஜனவரி 20ஆம் தேதிக்குள் 2 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளி நாட்டு வீரரை தக்கவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.