Advertisement

அறிமுக ஆட்டத்தில் சாதனை படைத்த அஷ்வானி குமார்!

முதல் ஐபிஎல் போட்டியிலேயே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆறாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஷ்வானி குமார் பெற்றுள்ளார்.

Advertisement
அறிமுக ஆட்டத்தில் சாதனை படைத்த அஷ்வானி குமார்!
அறிமுக ஆட்டத்தில் சாதனை படைத்த அஷ்வானி குமார்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 01, 2025 • 11:27 AM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 01, 2025 • 11:27 AM

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அஷ்வானி குமார் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு அணியின் வெற்றியிலும் பெரும் பங்காற்றியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் அஷ்வானி குமார் ஐபிஎல் தொடரில் சிறப்பு சாதனை ஒன்றையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

Trending

அதன்படி, தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆறாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அஷ்வானி குமார் பெற்றுள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் அல்சாரி ஜோசப், ஆண்ட்ரூ டை, சோயப் அக்தர், கெவோன் கூப்பர் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோர் மட்டுமே ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement