
ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 590 ரன்களை விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள வீரர்களிலேயே ஸ்பின்னர்களை ஸ்டெப் அவுட் செய்து விளாசக் கூடிய மிகச்சில வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட்-ம் ஒருவர். அந்த அளவிற்கு நளினமாக பேட்டிங் ஆடக் கூடியவர்.
அதுமட்டுமல்லாமல் எந்த அளவிற்கு ஸ்பின்னர்களை வெளுத்து வாங்குவாரோ, அதே அளவிற்கு வேகப்பந்துவீச்சாளர்கள் பொளந்து கட்டக் கூடிய வீரர். பும்ரா பந்துவீச்சையே சரியாக கணித்து சிக்சர்களை விளாசக் கூடிய அசாத்தியமான வீரர். சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் ஆசியப் போட்டிகளுக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் சரியா என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு டி20 தொடருக்கும் ஒரு கேப்டனை தேர்வு செய்வதாக பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.