
ஆசியக் கோப்பை தொடர் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு, இன்றுமுதல் செப்டம்பர் 11ஆம் தேதிவரை அமீரகத்தில் நடைபெறவுள்ளது.இத்தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், ஹாங்ஹாங், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் தொடங்கவுள்ள முதல் லீக் போட்டியில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதில் இலங்கை அணி இதுவரை மொத்தம் 5 முறை கோப்பை வென்று, இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும், கடந்த முறை படுமோசமாக சொதப்பி லீக் சுற்றுடன் நடையைக் கட்டியது. சமீபத்தில் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால், ஆசியக் கோப்பையில் இம்முறை அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த இரண்டுமுறை மட்டுமே ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடியிருக்கிறது. இரண்டுமுறையும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இம்முறை மேலும் முன்னேற்றம் காணும் நோக்கில், அதிரடியாக செயல்பட வாய்ப்புள்ளது.