
Asia Cup 2022, India vs Pakistan – India beat Pakistan by 5 wickets (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இதில் இன்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடியான பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி தான் அந்த அணியின் நட்சத்திர மற்றும் அபாயகரமான வீரர்கள். இந்த ஜோடியை தொடக்கத்திலேயே பிரிப்பதில் உறுதியாக இருந்தது இந்திய அணி.
இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ரன்னே விட்டுக்கொடுக்காமல் நெருக்கடி கொடுத்தார். அதன்விளைவாக புவனேஷ்வர் குமார் வீசிய 3ஆவது ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.