
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ஒரு வேலை பாகிஸ்தான் தோல்வியை தழுவினால், இந்தியா தொடரை விட்டு சென்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு இன்று ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கின்றனர். பரபரப்பான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இந்த ஆடுகளத்திலும் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் ஹசரத்துல்லா மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 3.5 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் எடுத்த நிலையில், முதல் விக்கெட்டை இழந்தது.
குர்பாஷ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஹஸ்ரத்துலா 21 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கரிம் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் 91 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த போது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி சரிவை நோக்கி சென்றது.