
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகள் மோதும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
பாகிஸ்தான் அணியிடம் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கேற்றார் போல ப்ளேயிங் 11 திட்டமும் போடப்பட்டு வருகிறது. இதே போல பாகிஸ்தான் அணியும் இந்தியாவை வீழ்த்த வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த அணி கடந்த சில போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால் பலமாக உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் ஒரே ஒருவரை நினைத்தால் தான் அச்சுறுத்தலாக இருப்பதாக பாபர் அசாம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் சிறந்த வீரர்கள் தான். ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சூர்யகுமார் தான் அச்சுறுத்தல் கொடுப்பவராக இருக்கிறார். அவரை சமாளிப்பது சிரமம்.