
Asia Cup 2022: Would have fancied my chances even if 15 were needed off final over, says Hardik Pand (Image Source: Google)
ஆசியக் கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.