
இந்தியா அணி நேற்று ஆசியக் கோப்பையில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது சுற்று தகுதி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய இந்திய அணி 48.2 ஓவரில் 230 ரன்களுக்கு நேபாள அணியை ஆல் அவுட் செய்தது. பந்துவீச்சில் இவ்வளவு தூரம் இழுக்க வேண்டிய சூழ்நிலை, இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்த காரணத்தினால் வந்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு குறிப்பாக இந்திய துவக்க ஆட்டக்காரர்களுக்கு நல்ல ஒரு பேட்டிங் பயிற்சியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் மழையின் நடுவே கவனத்தை இழந்து சீக்கிரத்தில் வெளியேறியதற்கு இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா 59 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 74 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 62 பந்தில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ரன்கள் எடுக்க, 20 ஓவரில் இந்திய அணி டக்வோர்த் லுவிஸ் விதிப்படி 145 ரன்களுக்கு 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.