
கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் உப்புதாளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தினர். இந்த விவகாரத்தில் அப்போது அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. மற்றொரு வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாத காலம் தடை விதித்தது.
அந்த சம்பவத்தை அடுத்து ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் கேப்டன் பதவியை வகிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக செயல்பட வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அந்த அணியுடன் 2 டி20, 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.