Advertisement

வெற்றிக்கு அருகில் வந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் - டாம் லேதம்!

நிச்சயம் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும் போது மனது வலிக்கும். ஆனாலும் இது சிறந்த போட்டியாக அமைந்துள்ளது என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 28, 2023 • 19:54 PM
வெற்றிக்கு அருகில் வந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் - டாம் லேதம்!
வெற்றிக்கு அருகில் வந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் - டாம் லேதம்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரது அதிரடியான தொடக்கத்தினாலும், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோரது அதிரடியான பினீஷிங்காலும் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலீப்ஸ், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Trending


இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம் ஆகியோர் அரைசதங்களை கடந்த போதிலும் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து 5 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் சதமடித்த டிராவிஸ் ஹெட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம், “100 ஓவர்களும் மிகச்சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. நிச்சயம் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும் போது மனது வலிக்கும். ஆனாலும் இது சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. தொடக்கத்திலேயே அட்டாக் செய்து ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை சோதித்தனர். இதனால் அவர்களின் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதிக அழுத்தம் இருந்த நேரத்தில் கிளென் பிலிப்ஸ் பவுலிங் செய்ய வந்தார். 

அந்த நேரத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. நிச்சயம் பயிற்சி செய்து அதற்கான பலன் கிடைக்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது. பேட்டிங்கில் தொடக்க வீரர்களும், ரச்சின் ரவீந்திரா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்கள் வீரர்களின் ஆட்டம் குறித்து பெருமையாக உள்ளது. தரம்சாலா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது சிறந்த அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement