
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மே 4ஆம் தேதியுடன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் மாலத்தீவில் சிக்கியுள்ளனர்.
கரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு வரும் மே 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. ஐபிஎல்-காக சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மே15 வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேர் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அவர்களை அங்கிருந்து தாய் நாட்டிற்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.