
இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்கும் நாளாக இன்று செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் தனது இறுதி அணியை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்தியத் தேர்வாளர்கள் உடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணி நிர்வாகம் இறுதிவரை உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்திருக்கும் அணியே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி போலவே ஆஸ்திரேலியா அணியும் தமது 15 பேர் கொண்ட இறுதி உலகக்கோப்பை அணியை அருவிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி எது என்பது குறித்து எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிர்ஷ்ட வீரர் மார்னஸ் லபுஷாக்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.