
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தோடங்கிய 15ஆஆவது ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரானது தற்போது “சூப்பர் 4” சுற்றில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது மட்டுமின்றி அசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்துவிட்டது.
இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படாமல் விடப்பட்டனர். அவர்களை தொடர்ந்து கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக ரவிந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார்.