
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று ப்ளோரிடா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இந்து தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பந்த் 44 ரன்களையும், ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.