Advertisement

இந்தியாவை விட எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் - பாபர் ஆசாம்!

இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 09, 2023 • 15:34 PM
இந்தியாவை விட எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் - பாபர் ஆசாம்!
இந்தியாவை விட எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் - பாபர் ஆசாம்! (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொடரின் லீக் சுற்றில் மோதிய போது பந்து வீச்சில் தெறிக்க விட்ட பாகிஸ்தான் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திண்டாட வைத்தது. அதனால் 66/4 என இந்தியா சரிந்த போதிலும் மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 266 ரன்கள் எடுக்க உதவினர்.

அப்போது மழை வந்ததால் ரத்து செய்யப்பட்ட போட்டியின் முடிவில் இரு அணிகளுமே சமமாக மோதிக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். எனவே அந்தப் போட்டியில் மழையால் தவற விட்ட வெற்றியை இம்முறை மீண்டும் சிறப்பாக செயல்பட்டு பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் இந்தியா வெற்றி வாகை சூடுவதற்கு முதலில் ஷாஹின் அஃப்ரிடி போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

Trending


இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்ததால் கிடைத்த மிகப்பெரிய தன்னம்பிக்கையை பயன்படுத்தி இம்முறை 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் தோற்கடிப்போம் என்று கேப்டன் பாபர் அசாம் கடந்த சில தினங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முடிந்த இலங்கை பிரிமியர் லீக் தொடரில் தங்களுடைய பெரும்பாலான வீரர்கள் விளையாடியதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

அது போக கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக இதே இலங்கை மண்ணில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டு 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக பாகிஸ்தான் முன்னேறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் எங்களுக்கு கிடைத்த தொடர்ச்சியான கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக விளையாடியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்தியாவை விட எங்களுக்கு அதிக சாதகம் இருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக கடந்த இரண்டரை மாதங்களாக நாங்கள் இலங்கையில் தொடர்ந்து விளையாடி வருகிறோம். அதாவது சமீபத்தில் இங்கு டெஸ்ட் தொடரிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடிய நாங்கள் எல்பிஎல் தொடரிலும் விளையாடினோம். எனவே அது எங்களுக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்வேன்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement