Advertisement

பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 06, 2023 • 13:27 PM
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல் (Image Source: CricketNmore)
Advertisement

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர்.

Trending


இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 8 ரன்களிலும், கேப்டன் ஷான்டோ 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். மோமினுல் ஹேக் 5 ரன்னில் வந்து வேகத்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முஷ்ஃபிகுர் ரஹிம் நிதானமாக விளையாடினார். 3 ஃபோர்ஸ், 1 சிக்ஸர் விளாசி 83 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், இன்னிங்ஸின் 41ஆவது ஓவரை கைல் ஜேமிசன் வீசினார். அப்போது 4ஆவது பந்தை எதிர்கொண்ட முஷ்ஃபிக்கூர் ரஹிம் லேசாக ஸ்ட்ரோக் வைத்தார்.

உடனடியாக பந்து ஆடுகளத்தில் பட்டு மேலே எழும்பி ஸ்டம்ப் அருகில் சென்றது. அப்போது சுதாரித்த முஷ்ஃபிக்கூர் ஸ்டம்ப்பில் பந்துபட்டு ஆட்டமிழக்கக் கூடாது என்ற காரணத்தால் சட்டென்று பந்தை கையால் பிடித்தார். இது சர்வதேச கிரிக்கெட் விதிமுறையின் படி தவறு ஆகும். உண்மையில், பந்து ஸ்டம்பை விட்டு சற்று தள்ளியே இருந்தது. பேட்டால் வேண்டுமானால் பந்தை தடுக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கையால் பந்தை பேட்ஸ்மேன் தடுக்கக் கூடாது. இது ஃபீல்டிங்கை செய்யவிடாமல் தடுப்பது போன்றதாகும்.

இதையடுத்து உடனடியாக நியூசிலாந்து வீரர்கள் அவுட் கோரி நடுவரிடம் முறையிட்டனர். நடுவரும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆட்மிழந்ததாக அறிவித்தார். இதன்மூலம் பந்தை கையாள்வதின் மூலம் ஆட்டமிழந்த முதல் வங்கதேச வீரர் எனும் மோசமான சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹீம் இன்று படைத்தார். இந்நிலையில் இவர் ஆட்டமிழந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement