
ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது.
அதன்பின் விளையாடிய பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் 104 ரன்கள் எடுத்தார். எனினும் பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தொடக்க வீராங்கனைகள் 91 ரன்கள் வரைக்கும் கூட்டணி அமைத்தார்கள். 8 ஓவர்கள் மீதமிருந்தபோது 183/2 என வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். எனினும் கடைசிக்கட்டத்தில் இதர பேட்டர்களால் இலக்கை ஒழுங்காக விரட்ட முடியாமல் போனது.