
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் கௌகாத்தியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேரா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் 22 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த பதும் நிஷங்கா, 8 பவுண்டரி ஒரு சிக்சர் என 68 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சரித் அசலங்கா 18 ரன்களுக்கு, கேப்டன் தசுன் ஷனகா 3 ரன்களுக்கும், திமுத் கருணரத்னே 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.