
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரங்களில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும் இத்தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்றே (ஜன.12) கடைசி நாள் என ஐசிசி கெடுவித்திருந்தது.
இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை காரணம் காட்டி பிசிசிஐ இத்தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது. இதுதவிர்த்து தற்போது வரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அறிவிக்காப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியாம் இன்று அறிவித்துள்ளது.