
ஆஸ்திரேலிய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்றுமுடிந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையி, டி20 தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 10 ரன்களிலும், எல்லிஸ் பெர்ரி 8 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் அலிசா ஹீலி - தஹ்லியா மெக்ராத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அலிசா ஹீலி 45 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹ்லியா மெக்ராத் 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது.