BANW vs INDW, 3rd T20I: இந்தியாவை மீண்டும் சொற்ப ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 103 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 28 ரன்களை எடுத்திருந்த ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 40 ரன்களுக்கு ஆட்டமிழதார்.
பின்னர் களமிறங்கிய யஸ்திகா பாட்டியா, அமஞோத் கவுர், பூஜா வஸ்திரேகர், தீப்தி சர்மா, மின்னு மணி என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ரபெயா கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now