
அயர்லாந்து மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடிவந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைப்பெற்றது.
சில்ஹெட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய் அந்த் அணிக்கு சோபனா மோஸ்ட்ரி - முர்ஷிதா கதும் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முர்ஷிதா கதும் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷார்மின் அக்தர் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோபனா மோஸ்ட்ரி 45 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 34 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷார்மின் அக்தரும் தனது விக்கெட்டை இழந்தார். இதனியடுத்து களமிறங்கிய வீராங்கனகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.