தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்!
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்! (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை (டிசம்பர் 10) தொடங்குகிறது. இத்தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் என்னுடைய முதல் பயிற்சியில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ராகுல் டிராவிட் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு அறிவுரை கூறினார். ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பயணிக்க கிடைத்த வாய்ப்பு சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதற்கு ரிங்கு சிங் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News