Advertisement

என்.சி.ஏ தலைவர் பதவிக்கான விண்ணப்பம் - பிசிசிஐ அறிவிப்பு!

தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து புதிய விண்ணப்பங்களைக் பிசிசிஐ கோரியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 10, 2021 • 16:13 PM
BCCI invites application for role of NCA cricket head
BCCI invites application for role of NCA cricket head (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் 2019ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாதமியின் (என்.சி.ஏ.) தலைவராக நியமிக்கப்பட்டார். 

பிசிசிஐ விதிமுறைகளின்படி என்.சி.ஏ. தலைவராக ராகுல் டிராவிட் 2 வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து என்.சி.ஏ. தலைவர் பதவிக்கான புதிய விண்ணப்பங்களை தற்போது பிசிசிஐ கோரியுள்ளது.

Trending


மேலும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்ட் 15. இதையடுத்து என்.சி.ஏ. தலைவராக மீண்டும் பணியாற்ற பிசிசிஐக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

என்.சி.ஏ. தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ரவி சாஸ்திரியின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி, டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. 60 வயது வரை மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற முடியும். ரவி சாஸ்திரிக்குக் கடந்த மே மாதம் 59 வயது முடிந்தது. 

இதனால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் பிசிசிஐ அமைப்பில் ஏதாவதொரு பெரிய பொறுப்பில் டிராவிட் நிச்சயம் இருப்பார் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement