
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பேஷ் லீக் தொடரில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக டாஸ் வீசுவதற்கு நாணயத்திற்கு பதில் பேட் வீசப்படும். இது போன்ற மாற்றங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ தற்போது சிறப்பான முடிவு ஒன்று எடுத்துள்ளது.
அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன் எப்போதும் 11 வீரர்களை அணி கேப்டன் தேர்வு செய்வார். ஆனால் எதிர்பார்த்தது போல் ஆடுகளம் செயல்படவில்லை என்றால் இந்த வீரருக்கு பதில் வேறு வீரரை தேர்வு செய்திருக்கலாமே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழும். இதனால் போட்டி சில சமயம் ஒரு அணிக்கு சாதகமாக மாறிவிடும். இதில் எந்த ஒரு விறுவிறுப்பும் இருக்காது.
இதனை மாற்ற தற்போது பிசிசிஐ சிறப்பான ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன்பே நான்கு மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டும். இதில் களத்தில் விளையாடும் ஏதாவது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக நான்கு வீரர்களின் யாராவது ஒருவர் பயன்படுத்தப்படுவார். இதேபோன்று இம்பேக்ட் பிளேயர் என்ற விதியை பிசிசிஐ கொண்டு வரவுள்ளது.