
BCCI learns from Hardik Pandya’s FITNESS Fiasco, instructs Indian cricketers to ‘follow Indian team’ (Image Source: Google)
ஐபிஎல் மீது நீண்ட நாட்களாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும், அதனை மறைத்து தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதனால் வீரர்களின் காயம் அதிகமாகி, அவர்கள் இந்தியாவுக்கு விளையாடுவது பாதிக்கப்படுகிறது. இது போல் பல சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் ஊதியம் போய்விடும் என்று வீரர்களும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக காயமடைந்த வீரர்களை தொடர்ந்து அணிகளும் பயன்படுத்துகிறது.
இதனை தடுப்பதற்காக தான் தற்போது பிசிசிஐ ஒரு புதிய முடிவை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, பிசிசிஐ ஓப்பந்தம் பெற்றுள்ள வீரர்களின் உடல் தகுதியை இனி தேசிய கிரிக்கெட் அகாடமியின் நிர்வாகிகளே கண்காணிப்பார்கள். இந்திய அணியின் டிரைனர்கள் கொடுக்கும் உடல்தகுதி வழிமுறையையே வீரர்கள் பின்பற்ற வேண்டும்.