
BCCI Looking For March 2023 As Window For Inaugural Women's IPL (Image Source: Google)
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் எட்டு அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆடவர் ஐபிஎல் தொடர் இன்று பிரம்மாண்ட வளர்ச்சிபெற்று கோடிகள் புரளும் விளையாட்டுத் தொடராக 10 அணிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
எனினும் மகளிர் ஐபிஎல் தொடர் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த பிசிசிஐயிடம் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018 – 2020காலக்கட்டத்தில் மூன்று அணிகள் கொண்ட மகளிர் டி20 சேலஞ்ச் என்ற தொடரை பிசிசிஐ நடத்தியது.
ஆனால் தொடர்ந்து அப்போட்டிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்தியாவின் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாறாக மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் துவண்டு கிடக்கும் நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.