
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், இரு வாரங்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் இரண்டாவது கட்டத்தை நோக்கி பயணித்தது. ஆனால் அதற்குள்ளாக பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரை பாதியிலேயே பிசிசிஐ ஒத்திவைத்தது. மேலும் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிசிசிஐ தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விவாதித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த ஆண்டு இறுதிவரை இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
ஐபிஎல் தொடரே இந்தியாவில் நடக்காத வேளையில் டி20 உலகக் கோப்பையையும் இங்கு நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு தொடர்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரே நாட்டில் வைத்து முடிந்துவிட வேண்டும் என்று பிசிசிஐ திட்டம் திட்டமிட்டு வருகிறது.