
BCCI President Sourav Ganguly Wanted To Issue Show Cause Notice to Virat Kohli For His Revelations I (Image Source: Google)
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டாரா? அல்லது விலகினாரா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடுபிடித்தது.
டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருக்கக்கூடாது என்ற காரணத்தால் ஒட்டுமொத்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்து கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா புதிய கேப்டனக சேர்க்கப்பட்டார்.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்திருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2 அணிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருந்தால் நன்றாக இருக்காது. இதனால்தான், கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கினோம். டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது, விலக வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். இருப்பினும் கோலி விலகினார் எனக்கூறியிருந்தார்.