
BCCI Should Consult Govt Before Sending Cricket Team to South Africa, Says Anurag Thakur (Image Source: Google)
இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் புதிய வகை உருமாறிய கரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் இத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "பிசிசிஐ மட்டுமல்ல, ஒவ்வொரு வாரியமும் புதிய கோவிட்-19 மாறுபாடு தோன்றிய நாட்டிற்கு அணியை அனுப்பும் முன் இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை பெற வேண்டும். கரோனா அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அணியை அனுப்புவது சரியல்ல. பிசிசிஐ எங்களிடம் ஆலோசனை கேட்டால் அது குறித்து ஆலோசிப்போம்" என்றார்.