Anurag thakur
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
ஆசிய கோப்பை தொடர் குறித்து ஜெய் ஷா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவித்திருந்தார்.
பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பேசியிருந்த அவர், பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால், இந்திய அணி அங்கு செல்லாது என்றும், ஆசிய கோப்பை தொடரை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட பாகிஸ்தான் வாரியம் கடும் எச்சரிக்கையை விடுத்தது.